மின் கட்டணம் செலுத்த வரும் 15ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சில மாவட்டங்களில் பெய்துள்ள கனமழையால் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர் மாவட்டங்களில் நவம்பர் 30 முதல் பெய்து வரும் கனமழையால் மின் கட்டணம்
செலுத்த முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.இதனால் மின் கட்டணம் செலுத்த வரும் 15ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Facebook Comment