வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பநடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்.| tnkalvi



வனத்துறையில் உள்ள காலிப் பணி யிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கு மாறு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.


          வனத்துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் பனகல் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமை வகித்தார்.

இக் கூட்டத்தில் செம்மரக் கடத்தலை தடுக்கும்வழிகள் குறித்தும், வனங்களில் மனித- வன உயிரின மோதல்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வனத்துறை மேற்கொள்ள வேண்டிய இதர பணிகள் பற்றி அமைச்சர் சீனிவாசன் கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து வனத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப துரித மாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத் தில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, வனத்துறை தலைவர் நா.கிருஷ்ண குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Share on Google Plus

About vinoth s

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Facebook Comment