பொறியியல் படிப்புக்கு அதிக கட்டண வசூல்: புகார் செய்யும் இடங்கள் அறிவிப்பு.

பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்து வருகிறது.பொது கலந்தாய்வு மூலம் தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒதுக்கீடு பெற்ற
மாணவர்கள், தர அங்கீகாரம் பெற்ற படிப்புக்கு ரூ.45 ஆயிரமும், தர அங்கீகாரம் பெறாத படிப்புக்கு ரூ.40 ஆயிரமும் கல்விக்கட்டணம் செலுத்த வேண்டும்.

கலந்தாய்வின் போது அவர்கள் செலுத்தும் டெபா சிட் கட்டணம் ரூ.5 ஆயிரத்தை கல்விக் கட்டணத்தில் கழித்துக் கொள்ளலாம்.அதேபோல சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்கள் கல்விக் கட்டணமாக ரூ.70 ஆயிரம் செலுத்த வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள இந்த கட்டணங்களைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால் மாணவர்கள் புகார் செய்யலாம்.


சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவர் விவகாரங்கள் மைய இயக்குநர், கல்லூரி இணைப்பு அங்கீகார இயக்குநர், தொழில் நுட்பக் கல்வி இயக்கக இயக்குநர், தொழில்நுட்ப இயக்கக அலுவலர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் கமிட்டி ஆகியோரிடம் நேரிலோ, தபால் மூலமாகவோ புகார் செய்யலாம்.புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
Share on Google Plus

About Vinoth ss

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Facebook Comment