பெண்களின் அவசர புத்திக்கு இந்த உண்மைச் சம்பவம் ஓர் உதாரணம்!

பெண்களின் அவசரப்புத்தி என்ற தலைப்பை படித்து விட்டு ஆ!
பெண்களு க்கு அவசர புத்தி இருக்கிறது என்று
சொல்வதா? ஆண்களுக்குத்தான் அல்லாடும் புத்தி இருக்கிறது எப்ப‍டி
இதைச்சொல்ல‍லாம் என்று போர்க்கொடி தூக்காமல் சற்று பொறுமை யாக பின்பவரும் வரிகளை படித்துப் பாருங்கள். இறுதியில் ஆம் என்று நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.
ஒன்பதாம் நூற்றாண்டில் குலோத்துங்கச் சோழனின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர்தான் இன்று கம்பன் வீட்டு கட்டுத்தரியும் கவிபாடும் என்று நாம் அனைவராலும் புகழப்படும் கவி சக்கரவர்த்தி கம்பன் பெருமான். இவரின் மகன்தான் இன்று காதலுக்கு உதாரணமாக அனைவரின் இதயங் களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அம்பிகாபதி. இவர் வாழ்ந்த காலத்தில் ஆட்சியில் செல்வ செழிப்புடன் திகழ்ந்த மன்னன் குலோத்துங் கச் சோழனின் குடும்பத்து இளவரசிதான் இந்த அமராவதி.
அந்த கால கட்டத்தில் அமராவதியை கல்வி கற்பதற்காக குலோத்துங்கச் சோழ மன்னன் கம்பன் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். அமராவதி யும் தினமும் கல்வி கற்க கம்பன் வீட்டிற்கு சென்றிருக்கிறார். ஒரு நாள் கம்பன் ஒரு அவசர வேளையாக வெளியூர் செல்லவேண்டியது இருப்பதா ல் நான் வரும் வரை எனது மகன் அம்பிகாபதி உங்கள் மகளுக்கு கல்வி கற்றுத் தருவார் என்று மன்னனிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம்.
அப்பொழுது கம்பரை விட அவரின் மகன் கவியில் சிறந்து விளங்கி இருக் கிறார் அதுதான் இந்த பொறுப்பை அவரிடம் கொடுக்க காரணமாம். கம்ப ன் சென்ற பிறகு அவர் சொன்னதுபோலவே பாடத்தை நடத்தத்தொடங்கி னார் அம்பிகாவதியும். சில தினங்களில் அவர்கள் இருவருக்கும் இடையி ல் காதல் பாடம் தொடங்கிவிட்டதாம்.
கம்பர் திரும்பி வந்து பார்த்தபொழுது இருவரும் மிகவும் காதலில் மூழ்கி ப்போனது கம்பனுக்கு தெரிய வந்ததாம் . இவர்களின் காதல் விவகாரம் மன்னனின் காதுக்கும் எட்டியதாம் மிகுந்த கோபம் கொண்ட மன்னன் அம் பிகாவதியை சிறைபிடிக்க உத்திரவிட்டாராம்.  ஒட்டக்கூத்தர் அம்பிகாப தி தண்டனை பெற வேண்டுமென்பதில் முனைப்பாக இருந்ததால் அரசனி டம் அவனது கோபத்தை மேலும் அதிகப்படுத்தும் விதமாகப் பல சட்டதிட் டங்கள், சம்பிரதாயங்கள் முதலியவற்றை எடுத்துக்கூறி நிலைமையை மிகவும் தீவிரமடையச் செய்தார். கம்பரின் வேண்டுதல்கள் எதுவும் மன்ன னின் செவியில் ஏறவில்லை.
முடிவாக அம்பிகாபதிக்கு ஒரு சோதனை நடத்தி அவன் அதில் வெற்றி பெற்றால் அமராவதியை மணக்கலாம் என்றும், தோல்வியுற்றால் மரண தண்டனை எனவும் முடிவு செய்யப்பட்டது. சபையோர் முன்னிலையில் 100 பாடல்களை தொடர்ந்து இயற்றிப்பாடுவது என்பதுதான் நிபந்தனை. நூறு பாடல்களை அம்பிகாபதி இயற்றி அரங்கேற்ற வேண்டும். அதில் காமரசம் துளியும் இருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டு இருந்தார்களாம் . அப்பாடல்களில் பிழை ஏற்பட்டாலோ, காமரசம் கலந்தாலோ, குறிப்பிட் ட காலத்துக்குள் நூறு பாடல்களை இயற்றத் தவறினாலோ தோற்றதாக அர்த்தம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்களாம்.
இந்த நிபந்தனையை ஏற்று அம்பிகாபதி பாட ஆரம்பித்தான். சபையில் அரசன் உள்ளிட்ட பல அறிஞர்களுடன் கம்பரும், ஒட்டக்கூத்தரும் அமர்ந் திருந்தனர். அமராவதி ஒரு திரைமறைவில் அமர்ந்துகொண்டு நிகழ்ச்சி யைக் காண அனுமதிக்கப்பட்டாள். அவள் நூறு மலர்களை ஒரு தட்டில் வைத்துக்கொண்டு அம்பிகாபதி பாடும் ஒவ்வொருபாடலுக்கும் ஒரு மலர் வீதம் அருகிலிருந்த மற்றொரு தட்டில் போட்டு, அம்பிகாபதி பாடும் பாட ல்களை எண்ணிக்கொண்டே வந்தாள். அமராவதி அவசர கதியிலும் பதற் றத்திலும் ஒரு மலரைக் கூடுதலாக‌ எறிந்ததால், அம்பிகாபதி ஒரு பாடல் குறைவாகவே பாடி நிறுத்திவிட்டாராம்.

100பாடலும் முடிந்துவிட்டது தன் காதலன் வெற்றி பெற்றுவிட்டான் என்ற எண்ணத்தில் அமராவதி அம்பிகாபதியை நோக்கி ஓடிவர அவளின் அழகி ல் மயங்கி சற்றே பருத்த தனமே துவளத் தரள வடந்துற்றேஎன காமரச ம் ததும்பும் பாடலொன்றைக் பாடிவிட்டாராம்.
இந்த பாடலுடன் அவன் 100 பாடல்களைப் பாடியிருந்தாலும் அவற்றுள் முதல்பாடல் கடவுள் வாழ்த்து ஆதலால் அது கணக்கில் எடுத்துக்கொள்ள ப்பட மாட்டாது. ஆகவே அம்பிகாபதி மொத்தம் பாடிய பாடல்கள் 99 மட்டு மே. அமராவதி இதையறியாமல் அவசரப்பட்டுவிட்டாள்.ஒட்டக்கூத்தர் இதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்.

அம்பிகாபதிக்கு மரணதண்டனை என தீர்ப்பு விதித்தான். அம்பிகாபதி இற ந்த செய்தி கேட்டு ஓடிவந்து அவனது மார்பில் விழுந்து உடன் அமராவதி யும் இறந்துபோனாலாம். இந்த உண்மையான காதலுக்காகத்தான் நாம் அனைவரும் அவர்களை காதலின் சிகரங்களாக இன்றும் நம் இதயங்களி ல்  வைத்திருக்கிறோம்.

இப்போது சொல்லுங்கள், அமராவதி அவசரப்படாமல் பொறுமைகாத்து, மிகுந்த சிந்தனையுடன் செயல்பட்டிருந்தால், அமராவதி, அம்பிகாபதி காதல் வெற்றிபெற்று திருமணத்தில் முடிந்திருக்கும் அல்லவா?
Share on Google Plus

About Vinoth ss

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Facebook Comment